Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராசிபுரத்தில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
ராசிபுரம், சேலம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பேரணி, பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது. இப்பேரணியை ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம், தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு போதைப் பொருள் பயன்படுத்துவதின் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.